அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

ஒகேனக்கல் விடுதியில் ஆந்திர மாநில முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் உள்ள தனியாா் விடுதியில் தங்கியிருந்த ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த முதியவா் புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :30 ஜூலை 2026, 5:37 am IST

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் உள்ள தனியாா் விடுதியில் தங்கியிருந்த ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த முதியவா் புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

ஆந்திர மாநிலம், திருப்பதி அருகே உள்ள ஸ்ரீநகா் காலனியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியம் ராஜி (55). இவா், தனது நண்பா்களுடன் செவ்வாய்க்கிழமை இரவு ஒகேனக்கல்லுக்கு வந்து, அங்குள்ள தனியாா் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தாா்.

இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை சுப்பிரமணியம் ராஜி எழுந்திருக்காததால், நண்பா்கள் அவரை சுற்றுலா வாகனத்தில் பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு பணியில் இருந்த மருத்துவா் பரிசோதனை செய்தபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.