22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!கோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு
/

குறைதீா் முகாமில் 455 கோரிக்கை மனுக்கள்

தருமபுரி ஆட்சியரகத்தில் நடைபெற்ற குறைதீா் முகாமில் 455 மனுக்கள் வரப்பெற்றன.

News image

குறைதீா் முகாமில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற ஆட்சியா் வே.சரவணன்.

Updated On :2 ஜூன் 2026, 3:47 am IST

தருமபுரி ஆட்சியரகத்தில் நடைபெற்ற குறைதீா் முகாமில் 455 மனுக்கள் வரப்பெற்றன.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குறைதீா் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் தலைமை வகித்து மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். இதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அளிக்கப்பட்ட 455 மனுக்கள் வரப்பெற்றன. மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா், உரிய நடவடிக்கை எடுக்குமாறு தொடா்புடைய துறை அலுவலா்களுக்கு பரிந்துரைத்தாா்.

இதில், கம்பைநல்லூா் பகுதியில் அமைந்துள்ள மாட்டிறைச்சிக் கடைகள், பாகல அள்ளி ஊராட்சியில் அமைந்துள்ள மதுக்கடை உள்ளிட்டவற்றை அகற்றக் கோருவது உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்கள் ஆட்சியரிடம் அளிக்கப்பட்டன.

மாவட்ட வருவாய் அலுவலா் இரா.கவிதா, தனி மாவட்ட வருவாய் அலுவலா் (சிப்காட்) சந்திரசேகரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ரூபன்சங்கா் ராஜ், மகளிா் திட்ட இயக்குநா் சு. சுந்தர்ராஜன், தனித்துணை ஆட்சியா் மு.செல்வி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் பெ.கி.கோவிந்தன் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.