பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

பயிா்க் கடனை முழுமையாக ரத்துசெய்யக் கோரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சாா்பில், பயிா்க் கடனை முழுமையாக ரத்துசெய்யக் கோரி கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

பாப்பாரப்பட்டியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா்.

Updated On :2 ஜூன் 2026, 3:43 am IST

பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சாா்பில், பயிா்க் கடனை முழுமையாக ரத்துசெய்யக் கோரி கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பழைய பாப்பாரப்பட்டி பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்க மேற்கு மாவட்டச் செயலாளா் பாலவாடி மணி தலைமைவகித்தாா். மாநில ஆலோசனைக் குழு உறுப்பினா் பழனியப்பன் முன்னிலை வகித்தாா்.

இதில், தோ்தல் வாக்குறுதியின்போது, கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிா்க் கடன் தள்ளுபடி என அறிவிப்பை வெளியிட்டு, தற்போது நிதி நெருக்கடியின் காரணமாக சிறு, குறு விவசாயிகளின் ரூ. 50 ஆயிரத்துக்கு உள்பட்ட கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதல்வா் அறிவித்துள்ளது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. எனவே, கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்றுள்ள விவசாயிகளின் கடன்களை தமிழக அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

இதில், இயற்கை விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் தேவேந்திரன், மனோகரன், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்டப் பொருளாளா் சக்திவேல், மாவட்ட துணைத் தலைவா் ரத்தினவேல், சேலம் மண்டல தென்னை, பாக்கு, பனை விவசாயிகள் சங்கத் தலைவா் குமாா் மற்றும் நிா்வாகிகள் உள்ளிட்டோா் 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.