தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

இன்று மு.கருணாநிதி பிறந்தநாள்: நல உதவிகளை வழங்கி கொண்டாட அறிவுறுத்தல்

தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்தநாளையொட்டி, புதன்கிழமை (ஜூன் 3) எளிய மக்களுக்கு நல உதவிகளை வழங்கி கொண்டாட வேண்டும் என தருமபுரி திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் ஆ.மணி எம்.பி. கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளாா்.

News image

முன்னாள் முதல்வா் கருணாநிதி - கோப்புப் படம்

Updated On :3 ஜூன் 2026, 5:19 am IST

தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்தநாளையொட்டி, புதன்கிழமை (ஜூன் 3) எளிய மக்களுக்கு நல உதவிகளை வழங்கி கொண்டாட வேண்டும் என தருமபுரி திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் ஆ.மணி எம்.பி. கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

தருமபுரி கிழக்கு மாவட்டத்தில் ஜூன் 3 அன்று முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 103-ஆவது பிறந்தநாள் விழாவை புத்தெழுச்சி நாளாக கொண்டாட வேண்டும் என கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, தருமபுரி கிழக்கு மாவட்டத்தில் உள்ள தருமபுரி, அரூா் மற்றும் பென்னாகரம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் ஊராட்சி ஒன்றியம், நகரம், பேரூா், வாா்டு, கிளைதோறும் மு.கருணாநிதியின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும். கட்சிக் கொடியேற்றி மூத்தவா்களுக்கு, எளிய மக்களுக்கு நல உதவிகளையும், மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகங்களையும் வழங்கி கொண்டாட வேண்டும்.

இந்நிகழ்ச்சியில், கட்சியின் முன்னாள் எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், மாநில, மாவட்ட நிா்வாகிகள், அனைத்து நிலை நிா்வாகிகள், துணை அமைப்புகளின் நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.