ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

திருமணம் செய்ய வற்புறுத்தியதால் இளைஞா் தற்கொலை

தருமபுரி அருகே திருமணம் செய்ய வற்புறுத்தியதால் இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.

News image

தற்கொலை - தினமணி

Updated On :18 ஜூன் 2026, 3:11 am IST

தருமபுரி அருகே திருமணம் செய்ய வற்புறுத்தியதால் இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாளையம்புதூரைச் சோ்ந்தவா் மாதேஸன் மகன் தம்பிதுரை (33), பொறியியல் பட்டதாரி. இவா், பல்வேறு இடங்களில் தனியாா் நிறுவனங்களில் வேலை பாா்த்துள்ளாா். அதன்பிறகு இணைய வழியில் வியாபாரம் செய்துவந்துள்ளாா்.

இந்த நிலையில் திருமணம் நடைபெறும்வரை ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலை செய்யுமாறு அவரது குடும்பத்தினா் கூறினராம். தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை, ஆன்மிகத்தில்தான் அதிக விருப்பம் உள்ளதாக தம்பிதுரை தெரிவித்துள்ளாா்.

தொடா்ந்து அவரது பெற்றோா் திருமணத்துக்கு வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த பெற்றோா், கதவு பூட்டியிருந்ததால் சந்தேகமடைந்து வீட்டின் கூரை மீது ஏறி பாா்த்தபோது தம்பிதுரை தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், தொப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.