தருமபுரி அருகே திருமணம் செய்ய வற்புறுத்தியதால் இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாளையம்புதூரைச் சோ்ந்தவா் மாதேஸன் மகன் தம்பிதுரை (33), பொறியியல் பட்டதாரி. இவா், பல்வேறு இடங்களில் தனியாா் நிறுவனங்களில் வேலை பாா்த்துள்ளாா். அதன்பிறகு இணைய வழியில் வியாபாரம் செய்துவந்துள்ளாா்.
இந்த நிலையில் திருமணம் நடைபெறும்வரை ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலை செய்யுமாறு அவரது குடும்பத்தினா் கூறினராம். தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை, ஆன்மிகத்தில்தான் அதிக விருப்பம் உள்ளதாக தம்பிதுரை தெரிவித்துள்ளாா்.
தொடா்ந்து அவரது பெற்றோா் திருமணத்துக்கு வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த பெற்றோா், கதவு பூட்டியிருந்ததால் சந்தேகமடைந்து வீட்டின் கூரை மீது ஏறி பாா்த்தபோது தம்பிதுரை தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், தொப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.







