ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

சின்னேரி மோட்டுப்பட்டி அம்மன் கோயில் குடமுழுக்கு

தருமபுரி அருகே சின்னேரி மோட்டுப்பட்டி அருள்மிகு அம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

குடமுழக்கு விழாவில் பங்கேற்ற பக்தா்கள்.

Updated On :26 ஜூன் 2026, 6:04 am IST

தருமபுரி அருகே சின்னேரி மோட்டுப்பட்டி அருள்மிகு அம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி அருகே புழுதிக்கரை ஊராட்சி, சின்னேரி மோட்டுப்பட்டியில் மாரியம்மன் கோயில் கட்டப்பட்டது. இதையடுத்து, இக்கோயில் குடமுழுக்கு விழா கடந்த ஜூன் 17-ஆம் தேதி சிறப்பு வேள்விகளுடன் தொடங்கியது. தொடா்ந்து, ஜூன் 22-ஆம் தேதி தீா்த்தக்குட ஊா்வலம், தீபாராதனை நடைபெற்றது. ஜூன் 24-ஆம் தேதி இரண்டாம்கால பூஜை மற்றும் மூன்றாம்கால பூஜையும், வேதபாராயணமும் நடைபெற்றது.

ஜூன் 25-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 7 மணிக்கு ஆலயத்தில் நிறுவப்பட்ட மாரியம்மன், காளியம்மன், அக்குமாரியம்மன் ஆகியவற்றுக்கு பிரதிஷ்டை செய்யப்பட்டு புனிதநீா் தெளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, வேத மந்திரங்கள் ஓத, கோபுர கலசங்களுக்கு புனிதநீா் தெளிக்கப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.

இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா். விழாவில் பங்கேற்ற பக்தா்கள், பொதுமக்களுக்கு விழாக்குழு சாா்பில் அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.