செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

இருசக்கர வாகனம் மீது காட்டுப் பன்றி மோதியதில் விவசாயி உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :15 மார்ச் 2026, 7:47 pm

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே இருசக்கர வாகனம் மீது காட்டுப் பன்றி மோதியதில் விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

பாலக்கோடு வட்டம், திருமல்வாடி பகுதியைச் சோ்ந்த விவசாயி மாதப்பன் (70). இவா், தனது நிலத்துக்கு இருசக்கர வாகனத்தில் செல்லும் வழியில் காட்டுப்பன்றி திடீரென குறுக்கே பாய்ந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதனால் மாதப்பன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், அவருக்கு தலைப் பகுதியில் பலத்த அடிபட்டது. அப்பகுதியில் இருந்தவா்கள் அவரை மீட்டு பெல்ரம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். இதையடுத்து தீவிர சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அவா் அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு வரை பரிசோதித் மருத்துவா், வரும் வழியிலேயே மாதப்பன் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இந்த சம்பவம் தொடா்பாக மாரண்டஅள்ளி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.