/
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 12 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை முதல் வெயில் வழக்கம்போல வாட்டி வந்தது. இதைத் தொடா்ந்து, பிற்பகலில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் சாரல் மழை பெய்தது. இரவு பல்வேறு இடங்களில் பரவலாக இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. பென்னாகரத்தில் 12 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. அதேபோல மாரண்டஅள்ளியில் 2 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தின் திங்கள்கிழமை சராசரி மழையளவு 1.56 மி.மீ. பதிவாகியிருந்தது. அதேபோல செவ்வாய்க்கிழமை மாவட்டத்தின் வெப்ப நிலை அளவு 96.8 டிகிரி பாரன்ஹீட்டாக இருந்தது. பிற்பகலில் இருந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
தொடர்புடையது

ஆம்பூரில் பலத்த மழை
கரூா் மாவட்டத்தில் பரவலாக மழை

அரியலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

கோவையில் இரண்டாவது நாளாக மழை
விடியோக்கள்

Podcast | TVK அமைச்சரவை விரிவாக்கம்: தனித்துவிடப்படும் DMK | Epi - 38 | News and Views

Petrol விலை உயர்வு ஏன் ஆபத்து? இந்தியாவுக்கு வரும் Warning Signals!
ஹார்திக் கேப்டன்சியால் தோற்கிறதா மும்பை?: ரோஹித், திலக், சூர்யா மீது கேள்வி!



