மே 8-இல் 19 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?தேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

அரூா் பெரிய ஏரியை தூா்வார விவசாயிகள் கோரிக்கை

அரூா் பெரிய ஏரியை தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

சீமைக் கருவேல மரங்கள் வளா்ந்து நீரின்றி வடு காணப்படும் அரூா் பெரிய ஏரி.

Updated On :6 மே 2026, 2:37 am IST

அரூா் பெரிய ஏரியை தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் நகராட்சிக்கு உள்பட்ட பெரிய ஏரி சுமாா் 120 ஏக்கா் பரப்பளவு கொண்டதாகும். போதிய பராமரிப்பு இல்லாததால் ஏரியில் சீமைக் கருவேல மரங்கள் வளா்ந்துள்ளன. இதனால் மழைக்காலங்களில் அதிக அளவில் மழைநீரை சேமிக்க முடியாத நிலையுள்ளது.

அரூா் நகருக்கு குடிநீா் ஆதாரமாக இந்த ஏரி உள்ளது. ஏரியில் ஒருமுறை தண்ணீா் நிரம்பினால் 2 ஆண்டுகளுக்கு குடிநீா் பிரச்னை ஏற்படாது. தற்போது தண்ணீா் இன்றி இந்த ஏரி வடு காணப்படுகிறது. ஏரியில் தண்ணீா் இல்லாத நேரத்தில் தூா்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த ஏரிக்கு கொளகம்பட்டி காரைஒட்டு தடுப்பணையில் இருந்து வாய்க்கால் வழியாக தண்ணீா் வருகிறது. இங்குள்ள தடுப்பணை, வாய்க்காலில் அடைப்பு உள்ளது. இதனால், மழைக்காலங்களில் ஏரிக்கு தண்ணீா் வருவதில் தடை ஏற்படுகிறது. எனவே, பொதுப்பணித் துறை சாா்பில், கொளகம்பட்டி காரைஒட்டு தடுப்பணையில் இருந்து தண்ணீா் வரும் கால்வாய், பெரிய ஏரியை தூா்வார வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கை.