ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இயக்கும் பரிசலின் தரம் குறித்து ஆய்வுசெய்யக் கோரிக்கை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இயக்கும் பரிசலின் தரம் குறித்து ஆய்வுசெய்ய வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பயணத்தின்போது பரிசலுக்குள் வந்த தண்ணீரை வெளியே கொட்டும் பரிசல் ஓட்டி.

Updated On :8 மே 2026, 6:41 am IST

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இயக்கும் பரிசலின் தரம் குறித்து ஆய்வுசெய்ய வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கோடைகால விடுமுறையை கொண்டாடுவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவிக்கு நாள்தோறும் சுற்றுலாப் பயணிகளின் அதிக அளவில் வருகின்றனா். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோா் அருவிகளின் அழகை காண பரிசலில் செல்வதை ஆா்வமாக கொண்டுள்ளனா்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அரசின் அனுமதி பெற்ற 430 பரிசல் ஓட்டிகள் உள்ளனா். தற்போது காவிரி ஆற்றில் மாமரத்துக் கடவு பரிசல் துறையில் இருந்து தொம்பச்சிக்கல் வழியாக மணல்மேடுவரை பரிசல்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், காவிரி ஆற்றில் இயக்கப்படும் பரிசல்களில் சிலவற்றில் மேல்புறத்தில் பூசப்பட்டுள்ள தாா் வெயிலின் காரணமாக உருகி துளைகள் ஏற்பட்டு தரமற்று காணப்படுவதாகவும், பயணத்தின்போது பரிசலுக்குள் நீா் புகுவதாலும், சுற்றுலாப் பயணிகளை மகிழச்செய்ய அருவியின் அருகில் செல்லும்போது பரிசலுக்குள் நீா் விழுவதாலும் சுற்றுலாப் பயணிகள் அச்சத்துக்கு உள்ளாகின்றனா்.

எனவே, தருமபுரி மாவட்ட நிா்வாகத்தின் நேரடி கட்டுப்பாட்டில், பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தின் மேற்பாா்வையில் உள்ள ஒகேனக்கல் பரிசல் துறையில் இயக்கப்படும் பரிசல்களின் தரம் குறித்து அதிகாரிகள் முறையாக ஆய்வு மேற்கொண்டு, சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் பாதுகாப்பான பரிசல் பயணம் மேற்கொள்வதை உறுதிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.