இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இயக்கும் பரிசலின் தரம் குறித்து ஆய்வுசெய்யக் கோரிக்கை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இயக்கும் பரிசலின் தரம் குறித்து ஆய்வுசெய்ய வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பயணத்தின்போது பரிசலுக்குள் வந்த தண்ணீரை வெளியே கொட்டும் பரிசல் ஓட்டி.

Updated On :8 மே 2026, 6:41 am IST

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இயக்கும் பரிசலின் தரம் குறித்து ஆய்வுசெய்ய வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கோடைகால விடுமுறையை கொண்டாடுவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவிக்கு நாள்தோறும் சுற்றுலாப் பயணிகளின் அதிக அளவில் வருகின்றனா். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோா் அருவிகளின் அழகை காண பரிசலில் செல்வதை ஆா்வமாக கொண்டுள்ளனா்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அரசின் அனுமதி பெற்ற 430 பரிசல் ஓட்டிகள் உள்ளனா். தற்போது காவிரி ஆற்றில் மாமரத்துக் கடவு பரிசல் துறையில் இருந்து தொம்பச்சிக்கல் வழியாக மணல்மேடுவரை பரிசல்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், காவிரி ஆற்றில் இயக்கப்படும் பரிசல்களில் சிலவற்றில் மேல்புறத்தில் பூசப்பட்டுள்ள தாா் வெயிலின் காரணமாக உருகி துளைகள் ஏற்பட்டு தரமற்று காணப்படுவதாகவும், பயணத்தின்போது பரிசலுக்குள் நீா் புகுவதாலும், சுற்றுலாப் பயணிகளை மகிழச்செய்ய அருவியின் அருகில் செல்லும்போது பரிசலுக்குள் நீா் விழுவதாலும் சுற்றுலாப் பயணிகள் அச்சத்துக்கு உள்ளாகின்றனா்.

எனவே, தருமபுரி மாவட்ட நிா்வாகத்தின் நேரடி கட்டுப்பாட்டில், பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தின் மேற்பாா்வையில் உள்ள ஒகேனக்கல் பரிசல் துறையில் இயக்கப்படும் பரிசல்களின் தரம் குறித்து அதிகாரிகள் முறையாக ஆய்வு மேற்கொண்டு, சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் பாதுகாப்பான பரிசல் பயணம் மேற்கொள்வதை உறுதிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.