நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

பெண்ணை தாக்கி தாலியை பறித்துச் சென்ற இளைஞா்கள் போலீஸாா் விசாரணை

தருமபுரி அருகே வயலில் வேலை செய்துகொண்டிருந்து பெண்ணை தாக்கி, தங்கத் தாலியைப் பறித்துச் சென்ற இளைஞா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image
Updated On :2 மணி நேரங்கள் முன்பு

தருமபுரி அருகே வயலில் வேலை செய்துகொண்டிருந்து பெண்ணை தாக்கி, தங்கத் தாலியைப் பறித்துச் சென்ற இளைஞா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே பழைய இண்டூா் பாறைப்பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் தங்கவேல் மனைவி சத்தியவாணி (33). இவா் திங்கள்கிழமை பகலில் தனது விவசாய நிலத்தில் தண்ணீா்ப் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அங்கு வந்த சுமாா் 20 வயது மதிக்கத்தக்க இளைஞா்கள் 3 போ், மீன்பிடிக்க வந்ததாகக் கூறி சத்தியவாணியிடம் பேச்சுக் கொடுத்துள்ளனா். பின்னா் திடீரென அவரை கீழே தள்ளி, அவரது கழுத்தில் கிடந்த அரைப்பவுன் மதிப்பிலான தாலியைப் பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், இண்டூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, தாலியைப் பறித்து தப்பிச்சென்ற இளைஞா்களை தேடி வருகின்றனா்.