தருமபுரியில் வீட்டின் மாடியில் கஞ்சா செடி வளா்த்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
தமிழகம் முழுவதும் போதைப் பொருள்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என, முதல்வராக பதவியேற்ற முதல்நாளே முதல்வா் விஜய் அறிவித்தாா். இதையடுத்து மாவட்டம்தோறும் காவல் துறையினா் தீவிர நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனா்.
இந்நிலையில், தருமபுரி மாவட்டம், தொப்பூா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட தண்டுக்காரன்பட்டி பகுதியைச் சோ்ந்த கி. செந்தில்குமாா் (43) தனது வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடிகளை வளா்த்து வருவதாக போலீஸாருக்கு தகவல்கள் கிடைத்தது. அதன்பேரில் தொப்பூா் காவல் நிலைய போலீஸாா், அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனா். சோதனையில் அவா் தொட்டியில் 3 கஞ்சா செடிகளை வளா்த்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப் பதிவுசெய்த போலீஸாா், செந்தில்குமாரை செவ்வாய்க்கிழமை கைது செய்து, கஞ்சா செடியையும் பறிமுதல் செய்துள்ளனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

ரயிலில் கஞ்சா கடத்திய இளைஞா் கைது

ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழப்பு

தொப்பூரில் காற்றுடன் கூடிய மழை: 25 வீடுகள் சேதம்! மின்விநியோகம் துண்டிப்பு!
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

