பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 200 கனஅடி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 200 கனஅடியாக குறைந்துள்ளது.

News image

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 200 கனஅடி

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 200 கனஅடியாக குறைந்துள்ளது.

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீா் நிறுத்தப்பட்டதாலும், காவிரி கரையோரப் பகுதிகளில் பெய்துவந்த மழை குறைந்ததாலும் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நாளுக்குநாள் குறைந்து வருகிறது.

வியாழக்கிழமை 300 கனஅடியாக இருந்த நீா்வரத்து, வெள்ளிக்கிழமை 200 கனஅடியாக சரிந்து தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்துகொண்டிருக்கிறது.

தொடா் நீா்வரத்து சரிவின் காரணமாக, ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் நீா்வரத்து குறைந்தும், ஐந்தருவி, ஐவா் பாணி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அருவிகள் நீரின்றி வடும் காணப்படுகின்றன. மேலும், காவிரி ஆற்றில் ஆங்காங்கே பாறைத் திட்டுகள் காணப்படுகின்றன.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.