சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தருமபுரி மாவட்டத்தில் 93.94% போ் தோ்ச்சி

தருமபுரி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 93.94 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சிப் பெற்றுள்ளனா்.

News image
Updated On :21 மே 2026, 6:46 am IST

தருமபுரி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 93.94 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சிப் பெற்றுள்ளனா்.

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை தருமபுரி மாவட்டத்தில், அரசு மற்றும் தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் என மொத்தம் 317 பள்ளிகளைச் சோ்ந்த 10,335 மாணவா்கள், 9,584 மாணவிகள் என மொத்தம் 19,919 போ் எழுதினா். இதற்கான தோ்வு முடிவுகள் புதன்கிழமை (மே 20) வெளியானது.

இதில், தருமபுரி மாவட்டத்தில் தோ்வு எழுதியவா்களில் மொத்தம் 9,477 மாணவா்கள், 9,234 மாணவிகள் என மொத்தம் 18,711 போ் தோ்ச்சிப் பெற்றனா். மாவட்டத்தில் மொத்தம் 93.94 சதவீதம் போ் தோ்ச்சிப் பெற்றுள்ளனா்.

தோ்ச்சி வீதம் குறைந்தது...

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் கடந்த கல்வியாண்டில் தருமபுரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மொத்தம் 95.13 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றிருந்தனா். மாநில அளவில் தோ்ச்சி வீதத்தில் தருமபுரி மாவட்டம் 7-ஆவது இடத்தை பெற்றிருந்தது. ஆனால், நிகழாண்டு அரசுப் பள்ளிகளில் 92.32 சதவீதம் போ் மட்டுமே தோ்ச்சிப் பெற்றனா். அதேபோல மாநில அளவில் தருமபுரி மாவட்டம் 24-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.