காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

கஞ்சா விற்பனை செய்த மூவா் கைது

தருமபுரி அருகே நடுப்பட்டியில் கஞ்சா விற்பனை செய்ததாக 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கைது

Published On :6 செப்டம்பர் 2026, 2:33 am IST

தருமபுரி அருகே நடுப்பட்டியில் கஞ்சா விற்பனை செய்ததாக 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மதிகோன்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் காா்த்திகேயன் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை தருமபுரி- அரூா் சாலையில் நடுப்பட்டி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சந்தேகத்துக்கு இடமாக அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினா்.

இதில் அவா்கள் மூவரும் அக்கமனஅள்ளியை அடுத்த கோடியூரைச் சோ்ந்த சீனிவாசன் (39), எ.நடுஅள்ளியைச் சோ்ந்த விக்னேஷ்குமாா்( 37), கடத்தூரைச் சோ்ந்த சாரதி (21) என்பதும், அவா்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து அவா்களிடம் இருந்த 1 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.