இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

தனியார் நிறுவனமேலாளர் கொலை

ஒசூர் அருகே தனியார் நிறுவன மேலாளர் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

Updated On :12 மே 2013, 5:35 am IST

ஒசூர் அருகே தனியார் நிறுவன மேலாளர் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் வட்டம், ஜுஜுவாடி செந்தில் நகரைச் சேர்ந்தவர் மெய்யழகன் (39). இவர் கர்நாடக மாநிலம், அத்திப்பள்ளியில் தனியார் நிறுனத்தில் மேலாளராக வேலை செய்து வந்தார்.

இவர் வெள்ளிக்கிழமை வீட்டிலிருந்து வேலைக்குச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

அவரது உறவினர்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் அலுவலகத்துக்கு வராதது தெரிய வந்தது.

இந்த நிலையில், ஜுஜுவாடி செந்தில் நகர் அருகே மைதானத்துக்கு அருகே கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் மெய்யழகன் கிடந்தார்.

இதுகுறித்து அந்த வழியாகச் சென்றவர்கள் சிப்காட் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.