கிராம நிர்வாக அலுவலர்கள் தற்செயல் விடுப்புப் போராட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
இணையதள சான்றிதழ்கள் செலவினத் தொகை, மாவட்ட மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
அதன் ஒரு பகுதியாக அரசு வழங்கிய மடிக்கணினிகளை வட்டாட்சியர்களிடம் ஒப்படைத்துப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு எடுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றும் 98 கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர். 
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 29-ஆம் தேதி, சென்னையில் உள்ள வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்திலும் ஈடுபட உள்ளதாக அந்தச் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தங்கராஜ் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com