பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

லாரி மோதி மாணவிகள் காயம்; சிலை சேதம்

கிருஷ்ணகிரி அருகே தக்காளி பாரம் ஏற்றி வந்த லாரி நிலைத் தடுமாறி மோதியதில் இரு கல்லூரி மாணவிகள் படுகாயமடைந்தனர்.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 2:06 am

DIN

கிருஷ்ணகிரி அருகே தக்காளி பாரம் ஏற்றி வந்த லாரி நிலைத் தடுமாறி மோதியதில் இரு கல்லூரி மாணவிகள் படுகாயமடைந்தனர். மேலும் சாலையோரம் இருந்த இந்திரா காந்தியின் சிலையும் சேதமடைந்தது.
மால்குப்பத்தைச் சேர்ந்தவர் மாணவி சோனியா (21). இவர், இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி - குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காட்டிநாயனப்பள்ளிபேருந்து நிறுத்தத்தின் அருகே சாலையைக் கடக்க முயன்றபோது எதிரே ஆந்திரா மாநிலம் சித்தூரிலிருந்து தக்காளி பாரம் ஏற்றி வந்த லாரி மோதியது.
இதில் நிலைத்தடுமாறி லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் சிலை மீது மோதியது. 
இந்த விபத்தில் சிலை அருகே அமர்ந்திருந்த அதே தனியார் கல்லூரியில் பயிலும் கோட்டகொல்லை கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு மாணவி முனீஸ்வரியும் (21) படுகாயமடைந்தார்.
இந்த விபத்தில் முனீஸ்வரியின் கால்கள் துண்டானது. முனீஸ்வரி,  தீவிர சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மகாராஜ கடை போலீஸார் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநர் ராமூர்த்தியை (24) கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.