இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

ராணுவ கல்லூரியில் சேர தகுதித் தேர்வு அறிவிப்பு

ராணுவக் கல்லூரியில் சேர தகுதித் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் தெரிவித்துள்ளார்.

Updated On :5 ஏப்ரல் 2018, 7:27 am IST

ராணுவக் கல்லூரியில் சேர தகுதித் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்தியன் ராணுவக் கல்லூரியில் 2019-ஆம் ஆண்டு சேர்க்கைக்கான தகுதித் தேர்வு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்தத் தகுதி தேர்வானது ஜூன் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.  ஆங்கிலம் 125 மதிப்பெண்கள், கணிதம் 200 மதிப்பெண்கள், பொது அறிவு 75 மதிப்பெண்கள் என எழுத்துத் தேர்வு நடைபெறும். இதில், ஒவ்வொன்றிலும் 50 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவர். மேலும் விவரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர் ராணுவக் கல்லூரியில் சேர்ந்து பயனடையுமாறு அதில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.