செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே!
/

கிருஷ்ணகிரி மாவட்ட நூலகத்தில் குரூப் 2 தேர்வு இலவசப் பயிற்சி

கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகத்தில் குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட மைய நூலகர் கோபால்சாமி தெரிவித்தார்.

Updated On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகத்தில் குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட மைய நூலகர் கோபால்சாமி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர், புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகத்தில் குரூப்-2, ஆசிரியர் தகுதித் தேர்வு, போட்டித் தேர்வுகளுக்காந இலவச பயிற்சி வகுப்புகள் ஆக.18-ஆம் தேதி தொடங்குகின்றன. நவம்பர் 4-ஆம் தேதி வரையில் நடைபெறும் இந்தப் பயிற்சி வகுப்புகள் மாவட்ட மைய நூலகத்தில் காலை 10 முதல் மாலை 5 மணி வரையில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும். 
மத்திய, மாநில அரசுகளின் போட்டித் தேர்வுகளுக்கு தேவையான 600 நூல்கள் இந்த நூலகத்தில் உள்ளன.
போட்டித் தேர்வுக்கு தயாராகும் வகையில் ஆங்கில மாத இதழ்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.  போட்டித் தேர்வில் பங்கேற்க உள்ளவர்கள் சொந்த நூல்களைக் கொண்டு வந்து படிக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளன. 
நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 04343-236643 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 9488638482 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என அதில் அவர் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.