பெண்களின் சிறப்பை சிந்திக்க பாரதியை தூண்டியவர் சகோதரி நிவேதிதை!

பெண்களின் சிறப்பை சிந்திக்க பாரதியைத் தூண்டியவர் சகோதரி நிவேதிதை என கிருஷ்ணகிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சகோதரி நிவேதிதை ரத யாத்திரையில் கம்பன் கழக செயற்குழு உறுப்பினர் வாசுகி கண்ணப்பன் பேசினார்.
Updated on
1 min read

பெண்களின் சிறப்பை சிந்திக்க பாரதியைத் தூண்டியவர் சகோதரி நிவேதிதை என கிருஷ்ணகிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சகோதரி நிவேதிதை ரத யாத்திரையில் கம்பன் கழக செயற்குழு உறுப்பினர் வாசுகி கண்ணப்பன் பேசினார்.
கிருஷ்ணகிரிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த சகோதரி நிவேதிதையின் ரத யாத்திரைக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கிருஷ்ணகிரி ஜயப்பன் கோயில் அருகே நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் சிவதாஸ், நகர்மன்ற முன்னாள் தலைவர் கே.ஆர்.சி. தங்கமுத்து, ஒருங்கிணைப்பாளர் வசந்தராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மங்கள இசையுடன் வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், கிருஷ்ணகிரி வட்டச் சாலை அருகே நடைபெற்ற சொற்பொழில் கம்பன் கழக செயற்குழு உறுப்பினர் வாசுகி கண்ணப்பன் பேசியது:
பெண்களின் சிறப்பை சிந்திக்கும்படி பாரதியைத் தூண்டியவர் சகோதரி நிவேதிதை. பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும். பெண்களுக்கு கல்வியும், அறிவும் அவசியம் என எடுத்துரைத்தார். மேலும், பெண்களை சுதந்திர போராட்டத்தில் பங்கேற்க ஊக்கமூட்டியவரும் சகோதரி நிவேதிதை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com