காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

சேதமடைந்த அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வலியுறுத்தல்

போச்சம்பள்ளியை அடுத்த வாடமங்கலத்தில் சேதமடைந்த அங்கன்வாடி மையக் கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 12:02 am

DIN

போச்சம்பள்ளியை அடுத்த வாடமங்கலத்தில் சேதமடைந்த அங்கன்வாடி மையக் கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மையத்தில் 2 முதல் 5 வயது வரையிலான 20 குழந்தைகள் படித்து வந்தனர். தற்போது கட்டடத்தின் மேற்கூரை, கதவு ஜன்னல் உடைந்து பழுதானதால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுக்கின்றனர். ஆபத்தான நிலையில் உள்ள இக் கட்டடத்தை புதுப்பிக்க வேண்டும் என நீண்ட நாள்களாக பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், குடிநீர் வசதி இல்லாததால் மையத்துக்கு வரும் குழந்தைகளுக்கு உணவு சமைப்பதற்காக நீண்ட தொலைவு சென்று பணியாளர்கள் தண்ணீர் எடுத்து வருகின்றனர். அங்கன்வாடி மையம் அருகே செடிகள் முளைத்து மரம்போல் வளர்ந்து கிடக்கிறது.
எனவே, பழையக் கட்டடத்தை அகற்றி அங்கு புதிய கட்டடம் அமைக்க வேண்டும் என்பதே பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்பாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.