ஊத்தங்கரையில் அதிமுக ஒன்றிய, நகர செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அக் கட்சியின் ஊத்தங்கரை அவைத் தலைவர் கே.ஆர்.சுப்பிரமணி தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் ஏ.சி. தேவேந்திரன் வரவேற்றார்.
மாநில நில வள வங்கி தலைவர் சாகுல்அமீது, மாவட்ட அண்ணா தொழில்சங்கத் தலைவர் நாகராஜ், ஒன்றியக் குழுத் தலைவர் கிருஷ்ணன், நகரச் செயலாளர் பி.கே.சிவானந்தம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
வரும் மக்களவைத்தேர்தலுக்கான வாக்குச்சாவடி நிலைய குழு அமைப்பது, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து எம்எல்ஏ மனோரஞ்சிதம் நாகராஜ் ஆலோசனை வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








