சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் ஆவணப்பதிவு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
/

ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கத் தொடரும் தடை

காவிரியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லில் 14-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் அருவிகளில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

Updated On :23 ஜூலை 2018, 9:30 am IST

காவிரியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லில் 14-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் அருவிகளில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
கர்நாடக அணைகளிலிருந்து காவிரியாற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். எனினும், மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதால் பரிசல் இயக்கப்படவில்லை. மேலும், அருவிகளில் குளிக்கவும் அனுமதிக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.