தகுதியற்றவருக்கு அங்கன்வாடி பணி வழங்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண், மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஊத்தங்கரை, எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த அனித ô (33) அளித்த மனுவின் விவரம்: கணவரை இழந்த எனக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கூலித் தொழில் செய்யும் நான், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றுள்ளேன். ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளை வாசிக்கவும், எழுதவும் தெரியும்.
இத்தகைய நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22-ஆம் தேதி குறு அங்கன்வாடி பணிக்கு விண்ணப்பித்து, அதற்கான நேர்காணலில் பங்கேற்றேன். அப்போது, வெங்கடதாம்பட்டி ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி பணியானது விதவைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர். இதன்படி அந்தப் பணிக்கு நேர்காணலில் பங்கேற்றோரில் நான் மட்டுமே தகுதி பெற்றவள்.
இந்த நிலையில், தகுதி இல்லாத ஒருவருக்கு அந்தப் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். எனவே, கணவரை இழந்த எனக்கு, அந்தப் பணியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரைக்குடியில் ஏப்.19-இல் கிரிக்கெட் வீரா்கள் தோ்வு

பைக்கில் இருந்து கீழே விழுந்த இளைஞா் உயிரிழப்பு

திருச்செந்தூா் ஒன்றிய பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

முதல்வரின் 6-ஆம் கட்ட பிரசாரம்: ஆண்டிபட்டியில் இன்று தொடக்கம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

