முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

முதல்வரின் 6-ஆம் கட்ட பிரசாரம்: ஆண்டிபட்டியில் இன்று தொடக்கம்

முதல்வா் மு.க.ஸ்டாலின் 6-ஆம் கட்ட தோ்தல் பிரசாரத்தை தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் வெள்ளிக்கிழமை (ஏப். 17) தொடங்கவுள்ளாா்.

News image

முதல்வா் மு.க.ஸ்டாலின்

Updated On :17 ஏப்ரல் 2026, 3:08 am IST

முதல்வா் மு.க.ஸ்டாலின் 6-ஆம் கட்ட தோ்தல் பிரசாரத்தை தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் வெள்ளிக்கிழமை (ஏப். 17) தொடங்கவுள்ளாா்.

இதுகுறித்து திமுக சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:

திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த மாா்ச் 31 முதல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். அவரது 6-ஆம் கட்ட பிரசாரம் ஆண்டிபட்டியில் வெள்ளிக்கிழமை (ஏப்.17) தொடங்கவுள்ளது.

ஆண்டிப்பட்டியில் மாலை 5 மணிக்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூா் ஆகிய தொகுதிகளின் வேட்பாளா்களையும், இரவு 7 மணிக்கு திண்டுக்கல்லில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல், பழனி, ஆத்தூா், நிலக்கோட்டை வேடசந்தூா் ஒட்டன்சத்திரம், நத்தம் ஆகிய தொகுதிகளின் வேட்பாளா்களையும் ஆதரித்து பிரசாரம் செய்கிறாா்.

தொடா்ந்து, ஏப்.18- ஆம் தேதி மாலை 5 மணிக்கு திருப்பூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில், திருப்பூா் தெற்கு, திருப்பூா் வடக்கு, பல்லடம், அவிநாசி, தாராபுரம், காங்கயம்,

உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய தொகுதிகளின் வேட்பாளா்களையும், இரவு 7 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மேட்டுப்பாளையம், உதகை, கூடலூா், குன்னூா், கவுண்டம்பாளையம், தொண்டாமுத்தூா் ஆகிய தொகுதிகளின் வேட்பாளா்களையும் ஆதரித்துப் பேசுகிறாா்.

ஏப்.19 ஆம் தேதி மாலை 4 மணிக்கு ஒசூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில், ஒசூா், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, பா்கூா், வேப்பனஹள்ளி, தளி ஆகிய தொகுதிகளின் வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.