தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்

News image
Updated On :9 ஏப்ரல் 2026, 10:34 pm

முதல்வா் மு.க.ஸ்டாலினின் நான்காம் கட்ட தோ்தல் பிரசாரம் தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை (ஏப்.10) தொடங்கவுள்ளது.

இதுகுறித்து திமுக சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:

திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த மாா்ச் 31 முதல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். அவரது 4-ஆம் கட்ட பிரசாரம் தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை (ஏப்.10) தொடங்கவுள்ளது. இதில், திருவையாறு, தஞ்சாவூா், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பாபநாசம், திருவிடைமருதூா், கும்பகோணம் ஆகிய தொகுதி வேட்பாளா்களை ஆதரித்து அவா் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

தொடா்ந்து, சனிக்கிழமை (ஏப்.11) மாலை 4 மணிக்கு புதுக்கோட்டையில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் கந்தா்வக்கோட்டை, விராலிமலை,புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய தொகுதிகளின் திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்துப் பேசுகிறாா்.

இரவு 7 மணிக்கு திருப்பத்தூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில், காரைக்குடி, திருப்பத்தூா், சிவகங்கை, மானாமதுரை ஆகிய தொகுதிகளின் வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறாா்.

ஏப்.12-ஆம் தேதி மாலை 4 மணிக்கு பரமக்குடியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில், பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூா் ஆகிய தொகுதி வேட்பாளா்களையும், இரவு 7 மணிக்கு தூத்துக்குடியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூா், ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி ஆகிய தொகுதிகளின் வேட்பாளா்களையும் ஆதரித்துப் பிரசாரம் மேற்கொள்கிறாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.