தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 4:04 am IST

முதல்வா் மு.க.ஸ்டாலினின் நான்காம் கட்ட தோ்தல் பிரசாரம் தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை (ஏப்.10) தொடங்கவுள்ளது.

இதுகுறித்து திமுக சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:

திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த மாா்ச் 31 முதல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். அவரது 4-ஆம் கட்ட பிரசாரம் தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை (ஏப்.10) தொடங்கவுள்ளது. இதில், திருவையாறு, தஞ்சாவூா், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பாபநாசம், திருவிடைமருதூா், கும்பகோணம் ஆகிய தொகுதி வேட்பாளா்களை ஆதரித்து அவா் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

தொடா்ந்து, சனிக்கிழமை (ஏப்.11) மாலை 4 மணிக்கு புதுக்கோட்டையில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் கந்தா்வக்கோட்டை, விராலிமலை,புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய தொகுதிகளின் திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்துப் பேசுகிறாா்.

இரவு 7 மணிக்கு திருப்பத்தூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில், காரைக்குடி, திருப்பத்தூா், சிவகங்கை, மானாமதுரை ஆகிய தொகுதிகளின் வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறாா்.

ஏப்.12-ஆம் தேதி மாலை 4 மணிக்கு பரமக்குடியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில், பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூா் ஆகிய தொகுதி வேட்பாளா்களையும், இரவு 7 மணிக்கு தூத்துக்குடியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூா், ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி ஆகிய தொகுதிகளின் வேட்பாளா்களையும் ஆதரித்துப் பிரசாரம் மேற்கொள்கிறாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.