தேசிய உரிமை ஆணையத்தின் சின்னம், பெயர் ஆகியவற்றை தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட எச்சரிக்கை: தேசிய மனித உரிமை ஆணையத்தின் சின்னம், பெயர் ஆகியவற்றை நேரடியாகவோ, மறைமுகமாகவோ அல்லது அதில் சில மாற்றங்கள் செய்தோ தன்னார்வ அமைப்புகள், சங்கங்கள், நிறுவனங்கள் செயல்படுவது சட்டப்படி குற்றமாகும்.
இது பொதுமக்களிடையே தேவையற்ற குழப்பத்தை விளைவிக்கிறது. இந்தச் செயல்கள் சின்னம், பெயர்கள் தவறாக பயன்படுத்துவதை தடுத்தல் சட்டம் 1950-இன் உள்பிரிவு 3, 4, 5-இன் படி குற்றமாகும். எனவே, அவ்வாறு செயல்படும் தன்னார்வு அமைப்புகள், சங்கங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் அவர்
எச்சரித்துள்ளார்.