வழிப்பறி: இளைஞர் கைது
போச்சம்பள்ளி அருகே வழிப்பறியில் ஈடுபட்டதாக இளைஞரை நாகரசம்பட்டி போலீஸார் கைது செய்தனர். போச்சம்பள்ளியை அடுத்த அகரம் அருகேயுள்ள


போச்சம்பள்ளி அருகே வழிப்பறியில் ஈடுபட்டதாக இளைஞரை நாகரசம்பட்டி போலீஸார் கைது செய்தனர்.
போச்சம்பள்ளியை அடுத்த அகரம் அருகேயுள்ள செல்லம்பட்டி பிரிவு சாலையில் உள்ள தேநீர் கடையில் இருந்த முதியவரிடம், இருசக்கர வாகனத்தில் வந்த நபர் கத்தியைக் காட்டி பணம் பறித்தார்.
இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் பாரூர் காவல் ஆய்வாளர் தலைமையில் நாகரசம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கோவிந்தராசன் மற்றும் போலீஸார் தீவிர தேடுதலுக்கு பிறகு பணம் பறித்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர், சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த தீவட்டிப்பட்டி காடையம்பட்டி வெள்ளப்பன் மகன் டியூக்அருள் என்கிற அருள்மணி(23) என்பதும், இவர் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் கத்தியைக் காட்டி இருசக்கர வாகனத்தை பறித்துச் சென்றதும் தெரியவந்தது.
பின்னர் இவரிடம் இருந்து ஒரு இருசக்கர வாகனம், ரூ. ஆயிரத்து ஐம்பது ரொக்கத்தை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்து சிறையிலடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...