மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

வழிப்பறி: இளைஞர் கைது

 போச்சம்பள்ளி அருகே வழிப்பறியில் ஈடுபட்டதாக இளைஞரை நாகரசம்பட்டி போலீஸார் கைது செய்தனர். போச்சம்பள்ளியை அடுத்த அகரம் அருகேயுள்ள

Updated On :12 நவம்பர் 2018, 10:06 pm

 போச்சம்பள்ளி அருகே வழிப்பறியில் ஈடுபட்டதாக இளைஞரை நாகரசம்பட்டி போலீஸார் கைது செய்தனர்.
போச்சம்பள்ளியை அடுத்த அகரம் அருகேயுள்ள செல்லம்பட்டி பிரிவு சாலையில் உள்ள தேநீர் கடையில் இருந்த முதியவரிடம், இருசக்கர வாகனத்தில் வந்த நபர் கத்தியைக் காட்டி பணம் பறித்தார்.
இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் பாரூர் காவல் ஆய்வாளர் தலைமையில் நாகரசம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கோவிந்தராசன் மற்றும் போலீஸார் தீவிர தேடுதலுக்கு பிறகு பணம் பறித்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர், சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த தீவட்டிப்பட்டி காடையம்பட்டி வெள்ளப்பன் மகன் டியூக்அருள் என்கிற அருள்மணி(23) என்பதும், இவர் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் கத்தியைக் காட்டி இருசக்கர வாகனத்தை பறித்துச் சென்றதும் தெரியவந்தது.
பின்னர் இவரிடம் இருந்து ஒரு இருசக்கர வாகனம், ரூ. ஆயிரத்து ஐம்பது ரொக்கத்தை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்து சிறையிலடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.