எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் 41 அடியாக உயர்வு

கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 41 அடியாக உயர்ந்துள்ளது.

Updated On :8 அக்டோபர் 2018, 8:35 am IST

கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 41 அடியாக உயர்ந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக கிருஷ்ணகிரி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள், கர்நாடக மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. ஞாயிற்றுகிழமை நிலவரப்படி விநாடிக்கு 621 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் நீர்மட்டம் 41 அடியாக உயர்ந்தது. அணையிலிருந்து பாசனத்துக்காக  விநாடிக்கு 606 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும், நெடுங்கல் அணையிலிருந்து பாரூர் ஏரிக்கு விநாடிக்கு 200 கன அடியும், கெலவரப்பள்ளி அணையிலிருந்து விநாடிக்கு 610 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. கெலவரப்பள்ளி அணையின் நீர்மட்டம் 42.15 அடியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.