கிருஷ்ணகிரியில் ஸ்ரீ மஞ்சுநாதா சில்க்ஸ் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
திறப்பு விழாவில் அதன் உரிமையாளர்கள் பி.என்.ரவி, என்.கோவிந்தராஜ், என்.பாஸ்கர் ஆகியோர் அனைவரையும் வரவேற்று முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தனர். கிருஷ்ணகிரி நகரில் தொடங்கப்பட்டுள்ள இக் கடையில் ரூ.1,000-க்கும் மேல் ஜவுளி வாங்குபவர்களுக்கு பரிசு பொருள்கள் வழங்கப்படுகின்றன.
சிந்தடிக் சேலை, காட்டன் சேலை உள்ளிட்ட பல வண்ணங்களில் பல ரகங்களில் சேலைகள், ஆண்கள், குழந்தைகளுக்கான பல முன்னணி நிறுவனங்களின் பல ரகங்களில் பேண்ட், சட்டைகள், வேட்டி என பல வகையான ஆடைகள், கைத்தறி ரகங்கள் விற்பனைக்கு உள்ளன. தீபாவளி வரை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பு பரிசுகள் உள்ளதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.