பர்கூரில் 14-ஆவது அகில இந்திய அளவிலான வாலிபால் போட்டி பிப்.25-ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்குகின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதாநத்தில் பர்கூர் கைப்பந்து கழகம் சார்பில் இந்த போட்டிகள் நடைபெறுகின்றன. பிப்.25-ஆம் தேதி மாலை 6 மணி அளவில் தொடங்கும் இப் போட்டிகள் மார்ச் 4-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
மின்னொளியில் 8 நாள்கள் நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை இந்தியன் வங்கி அணி, சென்னை ஐசிஎப் அணி, ஹரியாணா அணி, புதுதில்லி ரயில்வே அணி, கேரள கொச்சி பிபிசிஎல் அணி, ஆல் இந்தியா கஸ்டம்ஸ் அணி, கர்நாடக போஸ்டல் அணிகள் பங்கேற்கின்றன.
பெண்கள் பிரிவில் கேரள கேஎஸ்இஇ அணி, தில்லி இந்தியன் ரயில்வே அணி, கேரளா போலீஸ் அணி, சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி, மகாராஷ்டிர அணி, தில்லி சி.ஆர்.பி.எப். அணி ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாம்பியன்ஸ் லீக் கொண்டாட்டத்தில் வெடித்த வன்முறை: 400 பேர் கைது! | Paris
விஜய்யே வீடு தேடிவந்து துணை முதல்வர் பதவியைக் கொடுத்திருப்பார்: பிரேமலதா
கோடை மழையே வா!

தெரியுமா?
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


