போச்சம்பள்ளி சார்நிலைக் கருவூலத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டம் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சார்நிலைக் கருவூல அலுவலர் கோபிநாத் தலைமை வகித்தார். கொடமாண்டப்பட்டி தலைமை ஆசிரியர் சேகர் வரவேற்றார். கூடுதல் சார்நிலைக் கருவூல அலுவலர் சிங்காரவேல், சின்னசாமி, பரணி, தலைமை ஆசிரியர்கள் சரவணன், ஜெயவேல், ஜெகதீஷ்குமார், முதுநிலை வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றிவைத்து, இத்திட்டம் அனைத்துத் துறை சார்ந்த அரசு அலுவலர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
நிகழ்ச்சியில் போச்சம்பள்ளி வட்டாரத்தில் உள்ள அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். கணக்காளர் சூர்ய மாதவன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஜம்மு - காஷ்மீா்: எல்லை தாண்ட முயன்ற 3 போ் கைது

மணிப்பூரில் களமிறங்கும் கோப்ரா கமாண்டோக்கள்: மத்திய அரசு அதிரடி
பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான மிகை லாபத் தடுப்பு வரி குறைப்பு: இன்றுமுதல் அமல்

நீதிபதிகள் நியமன விவகாரத்தில் நீதித் துறையுடன் மோதல் இல்லை: சட்ட அமைச்சா்
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


