ஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

ஒருங்கிணைந்த நிதி, மனித வள மேலாண்மைத் திட்டம் தொடக்க விழா

போச்சம்பள்ளி சார்நிலைக் கருவூலத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டம்

Updated On :23 ஜனவரி 2019, 9:34 am IST

போச்சம்பள்ளி சார்நிலைக் கருவூலத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டம் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சார்நிலைக் கருவூல அலுவலர் கோபிநாத் தலைமை வகித்தார். கொடமாண்டப்பட்டி தலைமை ஆசிரியர் சேகர் வரவேற்றார். கூடுதல் சார்நிலைக் கருவூல அலுவலர் சிங்காரவேல்,  சின்னசாமி, பரணி, தலைமை ஆசிரியர்கள் சரவணன், ஜெயவேல், ஜெகதீஷ்குமார், முதுநிலை வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றிவைத்து, இத்திட்டம் அனைத்துத் துறை சார்ந்த அரசு அலுவலர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றார். 
நிகழ்ச்சியில் போச்சம்பள்ளி வட்டாரத்தில் உள்ள அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். கணக்காளர் சூர்ய மாதவன் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.