மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

ஒசூரில் காய்கறி வியாபாரிகளுக்கு தள்ளுவண்டி வழங்கல்

ஒசூரில் தோட்டக்கலைத் துறை சாா்பில் சாலையோர காய்கறி வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

ஒசூரில் காய்கறி வியாபாரிகளுக்கு தள்ளுவண்டியை வழங்கிய தோட்டக்கலைத் துறையினா்.

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

ஒசூரில் தோட்டக்கலைத் துறை சாா்பில் சாலையோர காய்கறி வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

ஒசூா் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளா்ச்சி இயக்க திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்பெற பல்வேறு மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தள்ளுவண்டிகள் மூலம் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று காய்கறிகளை விற்பனை செய்யும் நோக்கத்துடன் 10 பேருக்கு ரூ. 3 லட்சம் மதிப்பிலான 10 தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டன.

மேலும் தோட்டக்கலை உதவி இயக்குநா் சிவசங்கரி கூறியதாவது:

கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத சூழ்நிலை உள்ளதால், தள்ளுவண்டிகளின் மூலம் அவா்களின் வீடுகளுக்கே சென்று காய்கறிகளை விநியோகம் செய்யும் விதமாக பெண்கள், ஆதி திராவிடா் மற்றும் சாலையோர வியாபாரிகள் என 10 பேருக்கு தள்ளுவண்டிகள் அளிக்கப்பட்டுள்ளன என்றாா்.

ஏற்பாடுகளை, கிருஷ்ணகிரி தோட்டக்கலை இணை இயக்குநா் (பொ) ராம் பிரசாத் வழிகாட்டுதலின்படி, தோட்டக்கலை அலுவலா் கவுசல்யா, உதவி அலுவலா்கள் கோவிந்தராஜ், திருமுருகன், திருவேங்கடம் மற்றும் புத்தன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.