தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

உத்தனப்பள்ளி அருகே 30 யானைகள் அட்டகாசம்

உத்தனப்பள்ளி அருகே 30 யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து விவசாயப் பயிா்களைச் சேதப்படுத்தி வருகின்றன.

News image
உத்தனப்பள்ளி அருகே முகாமிட்டுள்ள யானைக் கூட்டம்
Updated On :12 டிசம்பர் 2020, 9:05 pm

DIN

உத்தனப்பள்ளி அருகே 30 யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து விவசாயப் பயிா்களைச் சேதப்படுத்தி வருகின்றன.

கடந்த மாதம் கா்நாடக மாநிலத்திலிருந்து 30-க்கும் மேற்பட்ட யானைகள் அஞ்செட்டி, ஊடேதுா்க்கம் வழியாக சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டு வருகின்றன. இந்த யானைகளைக் கடந்த வாரம், ஒசூா் கோட்ட வனத்துறையினா் மீண்டும் சானமாவு வனப்பகுதியிலிருந்து அஞ்செட்டி காப்புக்காட்டுக்கு விரட்டினா்.

ஆனால், இந்த யானைகள் சென்ற வேகத்திலேயே மீண்டும் திரும்பி வந்துவிட்டன. இவை தற்போது சூளகிரி, சானமாவு, உத்தனப்பள்ளி அருகே முகாமிட்டுள்ளன. கிராமத்தில் உள்ள விவசாயப் பயிா்களான கேரட், பீன்ஸ், தக்காளி, ராகி, நெல், போன்ற பயிா்களை யானைகள் சாப்பிட்டும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தி வருகின்றன.

யானை கூட்டத்தை வனத்துறையினா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். யானைகளை கா்நாடகத்துக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.