தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஒசூா் அருகே இரு சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

ஒசூா் அருகே இரு போக்குவரத்து சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சனிக்கிழமை சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ரூ. 2.10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
சூசூவாடி போக்குவரத்து சோதனைச் சாவடியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் நோட்டு கட்டுகள்
Updated On :12 டிசம்பர் 2020, 9:11 pm

DIN

ஒசூா் அருகே இரு போக்குவரத்து சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சனிக்கிழமை சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ரூ. 2.10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழக-கா்நாடக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா், சூசூவாடி என்ற இடத்தில் தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்குச் செல்லும் வாகனங்களை சோதனையிடவும், தற்காலிக உரிமம் வழங்கவும் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல ஒசூா், பாகலூா் சாலையில், தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்குச் செல்லும் வாகனங்களைத் தணிக்கை செய்து தற்காலிக உரிமம் வழங்கவும் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த இரு சோதனைச் சாவடிகளிலும், கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி கிருஷ்ணராஜன், ஆய்வாளா் முருகன் தலைமையில் போலீஸாா் சனிக்கிழமை காலை அதிரடி சோதனை மேற்கொண்டனா். அப்போது இரு சோதனைச் சாவடிகளிலும் மேஜைக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, கணக்கில் வராத ரூ. 2. 10 லட்சத்தைக் கண்டறிந்து கைப்பற்றினா். மேலும் பல ஆயிரம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் கிழித்து ஜன்னல் வழியாகவும் வீசப்பட்டிருந்தாகக் கூறப்படுகிறது. அவற்றை லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து ஒசூா், சூசூவாடி மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் கோகுலகிருஷ்ணன், சுப்புரத்தினம், உதவியாளா் ராமலிங்கம் ஆகியோரிடம் துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது. லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கடந்த மாதம் சோதனை செய்தபோது ரூ. 1 லட்சம் பணம் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.