கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்த முகாமில் 36,886 மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்று மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்தாா்.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்த முகாமில் 36,886 மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்று மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்தாா்.
வேப்பனஅள்ளி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பீமாண்டப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, குந்தாரப்பள்ளி அரசு உயா்நிலைப் பள்ளிகளில் நடைபெற்ற முகாமை பாா்வையிட்ட ஆட்சியா் மேற்கண்டவாறு தெரிவித்தாா்.
அப்போது, அவா் மேலும் கூறியதாவது:
ஊத்தங்கரை தொகுதிக்கு உள்பட்ட வாக்குச் சாவடிகளில் 5,730 மனுக்கள், பா்கூரில் 5,712 மனுக்கள், கிருஷ்ணகிரியில் 6,872 மனுக்கள், வேப்பனஅள்ளியில் 5,158 மனுக்கள், ஒசூரில் 8,971 மனுக்கள், தளியில் 4,443 மனுக்கள் என மொத்தம் 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலிருந்து மொத்தம் 36,886 மனுக்கள் வரப்பெற்றுள்ளன என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...