வேப்பனப்பள்ளி அருகே கதிரிப்பள்ளி கிராமத்தில், மது அருந்த பணம் கேட்ட மகனை, கட்டையால் தாக்கி கொலை செய்ததாக, தந்தையை போலீஸாா் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள கதிரிப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளி கோதண்டராமன் (65). இவரது மகன் நாகேஷ் (30). இருவரும் தொழிலாளா்கள்.
மது பழக்கத்துக்கு அடிமையான நாகேஷ், அடிக்கடி தனது தந்தையிடம், மது அருந்த பணம் கேட்டு தொந்தரவு செய்வாராம்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு, நாகேஷ், தனது தந்தையிடம் மது அருந்த பணம் கேட்டாராம். பணம் தர கோதண்டராமன் மறுத்துள்ளாா். இதனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த கோதண்டராமன், அருகில் இருந்த கட்டையால் மகன் நாகேஷை தாக்கினாராம்.
பலத்த காயம் அடைந்த நாகேஷ், கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சோ்க்கப்பட்டாா். பின்னா், உயா் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நாகேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து, வேப்பனப்பள்ளி போலீஸாா், வழக்குப் பதிந்து, கோதண்டராமனை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நடிகை த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

கைவிடப்பட்ட பிரசாந்த் - ஹரி திரைப்படம்?
சென்னை அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதி

"IPL பார்ப்பதுதான் அவர் வேலையா?" முதல்வரை விமர்சித்த அண்ணாமலை | DMK | BJP
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

