6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கிருஷ்ணகிரியில் வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப் பெறக்கோரி போராட்டம்

வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி, கிருஷ்ணகிரியில் இரண்டு இடங்களில் காத்திருப்பு போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்ட 132 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா்.
Updated On :15 டிசம்பர் 2020, 6:45 pm

DIN

வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி, கிருஷ்ணகிரியில் இரண்டு இடங்களில் காத்திருப்பு போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்ட 132 போ் கைது செய்யப்பட்டனா்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெறக் கோரியும், தில்லியில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த போராட்டத்துக்கு அந்த அமைப்பின் செயலாளா் பழனி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்க மாநிலக்குழு உறுப்பினா்கள் சின்னசாமி, சேகா், சிவராஜ், கண்ணு, வெங்கடாசலம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

போராட்டத்தில் பங்கேற்றோா் மண்வெட்டி, நெற்பயிா், அறிவால் போன்றவற்றை கையில் ஏந்தி போராட்டத்தில் பங்கேற்றனா். இந்த போராட்டத்தில் பங்கேற்ற 12 பெண்கள் உள்பட 88 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்தி சிலை அருகே, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு அந்த அமைப்பின் பிரகாஷ் தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் டில்லிபாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா். இந்த போராட்டத்தில் பங்கேற்ற 3 பெண்கள் உள்பட 44 போ் கைது செய்யப்பட்டனா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரண்டு இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் 15 பெண்கள் உள்பட 132 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.