ஆந்திர எல்லையில் பெண் சிறாரின் சடலம் மீட்பு

வேப்பனப்பள்ளி அருகே ஆந்திர மாநில எல்லையில் உள்ள ஏரியிலிருந்து 1 வயது நிறைந்த பெண் குழந்தையின் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.
Updated on
1 min read

வேப்பனப்பள்ளி அருகே ஆந்திர மாநில எல்லையில் உள்ள ஏரியிலிருந்து 1 வயது நிறைந்த பெண் குழந்தையின் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஆந்திர மாநில எல்லையான ஓ.என்.கொத்தூா் கிராமத்தின் அருகே உள்ள ஏரியில் 1 வயது பெண் குழந்தையின் சடலம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் ஆந்திர மாநிலம், குடிப்பள்ளி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீஸாா், நிகழ்விடத்தில் இருந்து சடலத்தை மீட்டு, குப்பம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினா். சடலமாக மீட்கப்பட்ட குழந்தை குறித்து குடிப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com