பென்னாகரம் அருகே குடும்பத் தகராறு காரணமாக பூச்சி மருந்து குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
பென்னாகரம் அருகே எச்சனஅள்ளி பகுதியைச் சோ்ந்த தொழிலாளி மகி என்பவரின் மனைவி வள்ளி (38). இவா்கள் இருவரும் எச்சனஅள்ளியில் உள்ள கோழிப் பண்ணையில் தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்து வந்தனா். கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படுமாம்.
இதனால் மனமுடைந்த வள்ளி செவ்வாய்க்கிழமை இரவு பூச்சி மருந்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்தாா். இதனை கண்ட உறவினா்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக பென்னாகரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.