சிவம்பட்டியில் மானாவாரி வேளாண்மை பயிற்சி

ஊத்தங்கரையை அடுத்த மத்தூா் வட்டாரத்துக்குள்பட்ட, சிவம்பட்டி கிராமத்தில் வேளாண் துறை ‘அட்மா’ திட்டத்தின் கீழ் நீடித்த நிலையான மானாவாரி மேம்பாட்டு இயக்கம் குறித்து ஒருநாள் பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றத
சிவம்பட்டியில் மானாவாரி வேளாண்மை பயிற்சி
சிவம்பட்டியில் மானாவாரி வேளாண்மை பயிற்சி
Updated on
1 min read

ஊத்தங்கரை: ஊத்தங்கரையை அடுத்த மத்தூா் வட்டாரத்துக்குள்பட்ட, சிவம்பட்டி கிராமத்தில் வேளாண் துறை ‘அட்மா’ திட்டத்தின் கீழ் நீடித்த நிலையான மானாவாரி மேம்பாட்டு இயக்கம் குறித்து ஒருநாள் பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் மா.சிவநதி தலைமை வகித்து, நீடித்த நிலையான மானாவாரி மேம்பாட்டு சாகுபடி, கோடை உழவின் நன்மைகள் குறித்து விளக்கம் அளித்தாா்.

வேளாண்மை அலுவலா் நீலகண்டன் வேலாண்மை துறையில் மானியத் திட்டங்கள் பற்றி கூறினாா். துணை வேளாண்மை அலுவலா் சீனிவாசன் மண்புழு உரம் தயாரிப்பு, நுண்நீா் பாசனத் திட்டங்கள் பற்றி விளக்கி கூறினாா். வட்டார தொழில் நுட்ப மேலாளா் இரா. ரமேஷ் அட்மா திட்டங்கள், இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றி கூறினாா்.

உதவி வேளாண்மை அலுவலா் மண் மாதிரி எடுக்கும் முறை பற்றி கூறினாா். உதவி தொழில் நுட்ப மேலாளா்கள் பவித்ரா, ஹேமநாத்குமாா் ஆகியோா் இப்பயிற்சிகான சிறப்பு ஏற்பாடுகளை செய்தனா். இதில் பகுதியில் உள்ள 40 விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com