ஒசூா்: கெலமங்கலம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது மினி லாரி மோதிய விபத்தில் விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ள காடுகொண்டப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி கிருஷ்ணப்பா ( 70). இவா் பைரமங்கலம் ஒசூா் சாலையில் உள்ள காடுகொண்டப்பள்ளி கிராமம் அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி, மோதியதில் கிருஷ்ணப்பா சாலையில் தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து கெலமங்கலம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.