தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்! ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இரவில் சாலையை மறித்த ஒற்றை யானை

தேன்கனிக்கோட்டை அருகே இரவு நேரத்தில் சாலையை வழிமறித்து நின்ற ஒற்றை காட்டு யானையால் வாகன ஒட்டிகளும், பொதுமக்களும் அச்சம் அடைந்துள்ளனா்.

News image
தேன்கனிக்கோட்டை அருகே சானமாவு வனப்பகுதிச் சாலையில் இரவு நேரத்தில் வழி மறித்து நின்ற ஒற்றை யானை.
Updated On :24 டிசம்பர் 2020, 3:56 am

DIN

தேன்கனிக்கோட்டை அருகே இரவு நேரத்தில் சாலையை வழிமறித்து நின்ற ஒற்றை காட்டு யானையால் வாகன ஒட்டிகளும், பொதுமக்களும் அச்சம் அடைந்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள சானமாவு, தளி, ஜவளகிரி, தேன்கனிகோட்டை உள்ளிட்ட வனப்பகுதிகளில் காட்டு யானைகள் பல்வேறு குழுக்களாகச் சுற்றித் திரிகின்றன. இந்த யானைகளிடமிருந்து பொதுமக்களும், விவசாயிகளும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

இந்த நிலையில் தேன்கனிக்கோட்டையை அடுத்த அரசூா் நெல்குந்தி கிராமம் அருகே நெமிலேரி பகுதியில் ஒற்றை யானை கடந்த 3 நாள்களாக சாலையில் சுற்றித் திரிகிறது.

கடந்த சில நாள்களாக இரவு நேரத்தில் காட்டு யானை ஒன்று வழி மறித்து நிற்பதால் அந்த வழியே வாகனங்களில் செல்லும் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனா். நீண்ட நேரமாக அந்த யானை சாலையிலேயே சுற்றி வந்ததால் பொதுமக்களும், வாகன ஒட்டிகளும் அவதியடைந்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த வனத் துறையினா் பட்டாசு வெடித்து அந்த யானையை அருகிலுள்ள வனப்பகுதிக்குள் விரட்டியதால் மக்கள் நிம்மதியடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.