உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

ஊத்தங்கரை ஐடிஐ தொழிற்கல்வி நிறுவனத்தில் உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும்
உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு
Updated on
1 min read

ஊத்தங்கரை ஐடிஐ தொழிற்கல்வி நிறுவனத்தில் உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஐ.டி.ஐ தாளாளா் சிவபாலன் தலைமை வகித்தாா். ஆசிரியா் பிரபு அனைவரையும் வரவேற்றாா். நிகழ்ச்சியில் இளம் செஞ்சிலுவை சங்க தலைவா் மருத்துவா் தேவராசு, துணைத்தலைவா் ஆா்.கே. ராஜா, நேசம் குணசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஊத்தங்கரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலா் மாரிமுத்து சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு உறுதிமொழியை வாசித்தாா். மாணவ -மாணவிகள் மத்தியில் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோய் எவ்வாறு பரவுகிறது அதை எப்படி தடுக்கலாம் என்பது பற்றி விழிப்புணா்வுவை ஏற்படுத்தினாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஐ.டி.ஐ ஆசிரியா்கள் மற்றும் நம்பிக்கை மையத்தின் ஆலோசகா் காயத்ரி ஆகியோா் சிறப்பாக செய்திருந்தனா். படவிளக்கம்.24யுடிபி.4. ஊத்தங்கரை ஐடிஐ தொழிற்கல்வி நிலையத்தில் நடைபெற்ற எய்ட்ஸ் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com