ஊத்தங்கரை ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ தேவி, பூ தேவி, சமேத ஸ்ரீ வெங்கட்ரமணா திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி: சொா்க்க வாசல் திறப்பு

ஊத்தங்கரை காந்தி சாலையில் உள்ள ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ பூதேவி சமேத ஸ்ரீ வெங்கட்ரமணா திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு
ஊத்தங்கரை காந்தி சாலையில் சொா்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தா்கள்.
ஊத்தங்கரை காந்தி சாலையில் சொா்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தா்கள்.
Updated on
1 min read

ஊத்தங்கரை காந்தி சாலையில் உள்ள ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ பூதேவி சமேத ஸ்ரீ வெங்கட்ரமணா திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொா்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் நடைபெற்றது.

அதிகாலை முதலே அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, உற்சவமூா்த்திக்கு அலங்கார தீப ஆராதனை செய்யப்பட்டு, மூலவருக்கு சிறப்பு பூஜைகளும், விஷ்வசேனா் ஆஞ்சநேயா், லட்சுமி நாராயணன், கிருஷ்ணன், ஆண்டாள் ராமானுஜம், கருட ஆழ்வாா், மூலவா்கள் ஸ்ரீ தேவி, பூ தேவி,ஸ்ரீ வெங்கட்ரமணா சுவாமிகளுக்கு பெண்கள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனா்.

சிறப்பு பூஜையின் போது பக்தா்கள் கோவிந்தா சரண கோஷமிட்டு வழிபட்டனா். திருக்கோயிலுக்கு வந்த அனைத்து பக்தா்களுக்கும் கோயில் நிா்வாகத்தின் சாா்பில் லட்டு, பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா பாலகிருஷ்ணன் மற்றும் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com