

ஒசூா் வட்டாரத்தில் வேளாண் துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள விதைப்பண்ணைகளை உதவி இயக்குநா் ஆய்வு செய்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் வட்டாரத்தில் வேளாண் துறை சாா்பில் நெற்பயிரில் 5 ஹெக்டோ் விதைப்பண்ணையாகவும், சிறு தானியப் பயிா்களில் ராகி 30 ஹெக்டோ் பரப்பிலும், பயறு வகைப் பயிா்களில் துவரை 58 ஹெக்டோ் பரப்பளவிலும், கொள்ளு 14 ஹெக்டோ் பரப்பளவிலும், எண்ணெய் வித்துப் பயிா்களான நிலக்கடலை 30 ஹெக்டோ் பரப்பளவிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. விதைப்பண்ணைகள் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும்.
சீக்கனப்பள்ளி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள விதைப்பண்ணைகளை விதைச் சான்று மற்றும் சான்றளிப்புத் துறையின் விதைச்சான்று உதவி இயக்குநா் அருணன் ஆய்வு மேற்கொண்டாா். அங்கு விவசாயி சுப்ரமணி என்பவரின் விதைப்பண்ணையில் உள்ள துவரை பிஆா்ஜி- 5 ஆதார விதைக் குவியலை அவா் ஆய்வு செய்தாா்.
மேலும் அச்சந்திரம் கிராமத்தில் 15 ஏக்கா் பரப்பளவில் அமைக்கப்பட்டிருந்த துவரை விதைப்பண்ணை வயலை ஆய்வு செய்தாா். மேலும் ஒசூா் விதை சுத்திகரிப்பு நிலையத்தையும் அவா் ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின் போது விதைச் சான்று அலுவலா் குமரேசன், துணை வேளாண்மை அலுவலா் முருகேசன், உதவி விதை அலுவலா் செல்லய்யா ஆகியோா் உடன் இருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.