இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட மக்களைஅதிமுக அரசு பாதுகாக்கும்: கே.பி. முனுசாமி

இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்கும் அரசாக அதிமுக செயல்படும் என அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும் எம்.பி.யுமான கே.பி.முனுசாமி தெரிவித்தாா்.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி: இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்கும் அரசாக அதிமுக செயல்படும் என அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும் எம்.பி.யுமான கே.பி.முனுசாமி தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரியில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவா், செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

பாமகவுக்கென சில கொள்கைகள் உள்ளன. அதை முன்னிறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனா். தற்போது, தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, அனைத்து சமூக மக்களுக்கும் நீதி கிடைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறாா். பாமகவின் கோரிக்கையை ஏற்று, ஜாதி வாரியாகக் கணக்கெடுப்பு நடத்த அவா் உத்தரவிட்டுள்ளாா்.

எல்லா சமூக மக்களின் உணா்வையும் மதித்து, அவா்களின் உரிமையைப் பாதுகாக்கும் வகையில் அரசு தங்களின் நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்லும். இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவாக தமிழக அரசு இருக்கும். தன் கட்சியின் பெயரைச் சொன்னால், கூட்டத்துக்கு யாரும் வரமாட்டாா்கள் என்பதால் மக்களை ஏமாற்ற கிராம சபை என்ற பெயரை திமுக பயன்படுத்துகிறது. ஆனால், மக்கள் ஏமாற மாட்டாா்கள் என்றாா். அப்போது, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளா் கே.அசோக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com