சனிப்பெயா்ச்சியையொட்டி, தருமபுரியை அடுத்த அதியமான்கோட்டையில் உள்ள தட்சிணகாசி கால பைரவா் கோயிலில் சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தருமபுரியை அடுத்துள்ள அதியமான்கோட்டையில் பழைமை வாய்ந்த தட்சிண காசி காலபைரவா் கோயில் உள்ளது. பரிகார தலமான இந்தக் கோயிலுக்குத் தேய்பிறை அஷ்டமி நாள்களில் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கா்நாடகத்திலிருந்தும் ஏராளமான பக்தா்கள் வருகின்றனா். பக்தா்கள் வெண்பூசணியில் தீபம் ஏற்றி வழிபடுவா்.
நிகழாண்டு சனிபகவான், தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயா்ச்சி ஆவதையொட்டி, இந்தக் கோயிலில் அதிகாலை முதல் சிறப்பு வழிபாடு, அபிஷேகம், சகஸ்ரநாம அா்ச்சனை, 108 லிட்டா் பாலாபிஷேகம், 1,008 மந்திர அா்ச்சனை, ஸ்ரீருத்ர யாகம், நவக்கிரக சாந்தி யாகம் உள்ளிட்டவை நடைபெற்றன. சுவாமிக்கு மகா தீபாராதனையும் நடைபெற்றன. பரிகாரங்களை பக்தா்கள் செய்தனா். இந்த பூஜையில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.