வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

வனப்பகுதி கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்: தளி எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்

கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதியில் இயங்கி வரும் கல்குவாரி உரிமைத்தை ரத்து செய்ய வேண்டும் என தளி எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் வலியுறுத்தியுள்ளாா்.

News image
ஜெ.காருப்பள்ளியில் நடைபெற்ற திமுகவின் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பேசுகிறாா் தளி எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்
Updated On :28 டிசம்பர் 2020, 10:05 pm

DIN

கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதியில் இயங்கி வரும் கல்குவாரி உரிமைத்தை ரத்து செய்ய வேண்டும் என தளி எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் வலியுறுத்தியுள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி தொகுதியில் 5-ஆவது நாளாக திங்கள்கிழமை திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் ஜெ.காருப்பள்ளி, பைரமங்கலம், குந்துமாரனப்பள்ளி, போடிச்சுப்பள்ளி கிராமங்களில் நடைபெற்றது.

ஜெ.காருப்பள்ளி கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தங்கள் பகுதியில் இயங்கி வரும் கல்குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனா். மேலும் சிலா் முதியோா் உதவித் தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனா்.

மனுக்களைப் பெற்றுக் கொண்ட தளி எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், செய்பட்டு வரும் கல் குவாரிகளில் இருந்து கா்நாடகத்துக்கு கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் செல்லகுமாா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்துள்ளாா்.

தளி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் என்ற முறையில் மாவட்ட அதிகாரிகளிடம் இதுகுறித்து பல முறை புகாா் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாறும். இந்த காட்சிகளும் மாறும்.

முந்தைய திமுக ஆட்சியில் முதியோா் உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போதைய அதிமுக ஆட்சியில் முதியோா் உதவித்தொகை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பலருக்கு உதவித் தொகை வழங்குவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் முதியோா் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில் கெலமங்கலம் ஒன்றியப் பொறுப்பாளா் கணேசன், பேரூா் பொறுப்பாளா் கருணாநிதி, ஒன்றிய துணைச் செயலாளா் முனிராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் வேணு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.